Friday, September 6, 2024

விநாயகர் சதுர்த்தி

 


விநாயக சதுர்த்தி என்பது தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானுக்கு மரியாதை செலுத்தி, அவர் பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகையாகும். கணேஷ பகவான் இந்த பிரபஞ்சத்தில் ஒழுங்கை ஏற்படுத்துகிறார் என்பதை பலர் உணர்ந்து, ஒரு புதிய வேலை , பயணம் அல்லது வணிக நிறுவனங்களை தொடங்குவதற்கு முன் அவரை வணங்குகிறார்கள். எனவே, இந்த இடங்களில் அவரது உருவங்கள் அல்லது சிலைகள் காணப்படுவது வழக்கம்.



இந்து மதத்தின் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவரான விநாயகர் யானையின் தலையைக் கொண்டிருப்பதற்காக அனைவராலும் அங்கீகரிக்கப்படுகிறார் மற்றும் சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதியின் மகன் ஆவார். 


ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாள் 10 நாள் திருவிழாவுடன் கொண்டாடப்படுகிறது, இதன் போது நான்கு முக்கிய சடங்குகளான பிராண பிரதிஷ்டை, ஷோடசோபச்சாரம், உத்தரபூஜை மற்றும் கணபதி விசார்ஜன் செய்யப்படுகிறது. 



பொதுவாக களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகள் மற்றும் பந்தல்கள் எனப்படும் தற்காலிக பொது மேடைகளில் அமைக்கப்படுவதால் விழாக்கள் தொடங்குகின்றன. பூசாரிகள் பின்னர் பிராண பிரதிஷ்டை நடத்துகிறார்கள், இதில் மந்திரங்கள் ஓதப்பட்டு, களிமண் தெய்வத்திற்குள் விநாயகரின் இருப்பை அழைக்கும் ஒரு சடங்கு, அதன் பிறகு அவருக்கு ஷோடசோபச்சாரா எனப்படும் 16-படி வழிபாட்டில் முறையான பிரார்த்தனைகள் வழங்கப்படுகின்றன. 



கொண்டாட்டத்தின் ஒவ்வொரு நாளும், பிரசாதம் அல்லது தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட உணவு, பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. பின்தொடர்பவர்கள் அவருடைய வடிவத்தின் பல அம்சங்களையும் தியானிக்கிறார்கள், இது ஆழமான ஆன்மீக உண்மைகளை அடையாளப்படுத்துகிறது, அதே நேரத்தில் பலர் விரதங்களைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். 



திருவிழாவின் கடைசி நாளில், உத்தரபூஜை செய்யப்படுகிறது, இது விநாயகருக்கு விடைபெறும் சடங்கு. பின்னர், அவர் ஒரு பொது ஊர்வலத்தில் கீர்த்தனையுடன் (பக்தி இசை) அருகிலுள்ள நீர்நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார், அதில் அவர் மூழ்கினார். இந்த வழக்கம் கணபதி விசார்ஜன் ஆகும், மேலும் இது சிவனும் பார்வதியும் வசிப்பதாகக் கூறப்படும் இமயமலையின் சிகரமான கைலாச மலைக்கு அவர் திரும்புவதைக் குறிக்கிறது.


வரலாற்றில் விநாயகர் சதுர்த்தி எவ்வளவு தூரம் அனுசரிக்கப்பட்டது என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், சில வரலாற்றாசிரியர்கள் 1600 களில் இந்திய மன்னர் முதலாம் சிவாஜி போசலே இந்த கொண்டாட்டத்திற்கு நிதியுதவி செய்தபோது இந்த விழா ஒரு முக்கிய பொது நிகழ்வாக மாறியது என்று நம்புகிறார்கள். 


19 ஆம் நூற்றாண்டில் இந்திய சுதந்திர இயக்கத்தின் அடையாளமாக, சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரால் இந்த விழா மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


1892 ஆம் ஆண்டில், இவ்வளவு பெரிய கூட்டங்களை ஆங்கிலேயர்கள் அனுமதிக்காத போதிலும், புனே மற்றும் மும்பை நகரங்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. 10 நாள் திருவிழா விநாயகர் மீது ஏகப்பட்ட ஆழ்ந்த பக்தி மற்றும் அன்பினால் தூண்டப்பட்ட தேசபக்தியுடன் கொண்டாடப்பட்டது. 


இன்றுவரை, இந்து பண்டிகைகள் இதேபோன்ற ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன, இது போன்ற பக்தி உருவாக்கக்கூடிய நித்திய சக்தியைக் குறிக்கிறது.

Thursday, September 5, 2024

டாக்டர்.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு‌ |

 


ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.




பிறப்பு:


டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.



ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்:


இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (B.A) மற்றும் முதுகலைப் பட்டமும் (M.A) பெற்றார்.




இல்லற வாழ்க்கை:

       ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.



ஆசிரியராக அவருடைய பணி:

       முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.





1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள். 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்தப் படைப்பாகும். 

           இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.


அவருடைய பணிகள்:



1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.


அரசியல் வாழ்க்கை:


டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது. 1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார்.



இறப்பு:


டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 

ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்

Thursday, August 29, 2024

சுவாமி ஐயப்பன் வரலாறு

 



மகிஷாசுரன் என்ற அரக்கன் இஸ்திகா கடவுளால் கொல்லப்பட்ட பிறகு, அவனது சகோதரி மகிஷி பழிவாங்குவதாக சபதம் செய்தாள். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தைதான் தன்னைக் கொல்ல முடியும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்றாள். இதைத் தடுக்க, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சிவனுடன் ஐக்கியமானார், இதன் விளைவாக ஐயப்பன் பிறந்தார். சிவனும் மோகினியும் குழந்தையை பம்பை ஆற்றங்கரையில் கைவிட்டனர், அங்கு குழந்தை இல்லாத ராஜா ராஜசேகர மற்றும் அவரது ராணியால் கண்டுபிடிக்கப்பட்டு தத்தெடுக்கப்பட்டது. 

குழந்தைப் பருவம்

அய்யப்பன் மன்னனின் மகனான இராஜ ராஜனுடன் தெய்வீக சாஸ்திரங்களைக் கற்றுத் திறமையான வீரனாக வளர்ந்தான். ராஜா அய்யப்பாவை ஆதரித்தார் மற்றும் அவர் அரியணைக்கு வாரிசாக வேண்டும் என்று விரும்பினார், ஆனால் ராணி அதற்கு பதிலாக தனது மகன் ராஜாவாக வேண்டும் என்று விரும்பினார். 


நோக்கத்தை உணர்தல்

ஒரு நாள், ராணி நோய்வாய்ப்பட்டாள், அரச மருத்துவர் புலிப்பாலை மருந்தாக பரிந்துரைத்தார். அய்யப்பன் பால் எடுக்க முன்வந்தார், இது ஆபத்தான வேலை என்று தெரிந்து கொண்டார். வழியில், அவர் மகிஷியை சந்தித்தார் மற்றும் பூமியில் தனது உண்மையான நோக்கம் அவளை தோற்கடிப்பதாக உணர்ந்தார். கடுமையான போருக்குப் பிறகு, ஐயப்பன் மகிஷியைக் கொன்று அவளுக்கு மோட்சத்தை வழங்கினார். 


தெய்வீகம் அங்கீகரிக்கப்பட்டது

ஐயப்பனின் தெய்வீகம் விரைவில் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு ஒரு சன்னதி எழுப்பப்பட்டது. பிந்தைய ஆண்டுகளில், ஐயப்பனைப் பற்றிய கதைகள் விரிவடைந்து, மக்களை தீமையிலிருந்து பாதுகாத்து, தர்ம நடைமுறைகளை மீட்டெடுக்க உதவிய ஒரு போர்வீரன் என்று விவரிக்கிறது. அவர் "ஹரிஹரன் புத்திரன்" என்றும் அழைக்கப்படுகிறார், அதாவது ஹரி அல்லது விஷ்ணு மற்றும் "ஹரன்" அல்லது சிவன் ஆகிய இருவரின் மகன்.

Tuesday, August 20, 2024

திருவோணம் பண்டிகை


ஓணம் கேரளாவின் முதன்மையான பண்டிகை இப்பண்டிகை மஹாபலிசக்கரவர்த்தி க்காக கொண்டாடப்படுகிறது அதை பத்தி இக்கட்டுரையில் பார்ப்போம்.



மஹாபலிசக்கரவர்த்தி


    அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை. 

ஓணம் பண்டிகை


மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடடப்படும் பண்டிகை தான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருதப்படுகின்றது. 

எலியாக இருந்த மகாபலி சக்கரவர்த்தி


      மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. 

தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலிக்கு அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாக படைத்தார்.

மகாபலி சக்கரவர்த்தி பெருமைகள்


       புராண கதைகளின் கூற்றுப்படி, கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்ததாகவும், அவர் மக்களை மிகவும் அரவணைப்புடன் கவனித்துக் கொண்டதாகவும், அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். 

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மகாபலி சக்கரவர்த்தி செய்த நற்காரியங்களால் அவனே அறியாத அளவிற்கு மிகுந்த உயர்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

வேள்வி 


        இந்நிலையில் நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தவும், வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்க முடிவு செய்தார் மகாபலி சக்கரவர்த்தி. 
இந்த வேள்வியை அசுர குரு சுக்ராசாரியார் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர், இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். 

வாமன அவதாரம் 


         தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக..... காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார். 

மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.

மூன்றடி மண்


        வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்களே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார். 

அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். 
அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார். 

ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார். 

தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார். 

அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது

வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி


          அதன் பின் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார். 
மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். 

அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி, என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார். 

அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார்.



பூக்கோலம் 

         மலையாளம் சிங்கம் மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தின் 10 நாள்கள் முன் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து பூக்கோலங்கள் வித விதமாக போட்டு மகாபலியை வரவேற்க ஆரம்பிப்பார்கள் கேரளா மக்கள்.



திருவோணம் 

         10 நாள் மகாபலிசக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளில் திருவோணம் கொண்டாடப்படுகிறது அன்று காலையில் உறவினர்கள் அனைவரும் ஓன்று கூடி புத்தடைகள் அணிந்து வித விதமான உணவுகள் சமைத்து அனைவரும் ஓன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் அதன் பிறகு ஓண ஊஞ்சல், திருவாதிரை, வள்ளம் களி, தூம்பி துள்ளல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஓணம் கொண்டாடுவார்கள்.